This Article is From Oct 06, 2018

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Advertisement
தெற்கு Posted by

தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ள காரணத்தினால், தமிழகத்தில் அதி கனமழை பெய்ய உள்ளது என்றும், குறிப்பாக (அக்.7) நாளை கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் குமரி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுடிருந்தது.

இந்நிலையில், தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ எனப்படும் அதி கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்,

Advertisement

அரபிக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளது. எனினும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி ஓமன் நோக்கி நகர்ந்து விடும். புயல் சின்னம் ஓமன் வளைகுடாவுக்கு நகர்வதால் தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்படுகிறது என்றார்.

மேலும், தமிழகத்தில் அக்டோபர் 8-ம் தேதி வரை கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement