Read in English
This Article is From Jun 13, 2019

மத்திய கைலாஷ் சிக்னல் சாலையில் உருவான திடீர் பள்ளம்

Chennai road cave-in: மத்திய கைலாஷ் சிக்னல் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் விழுந்த பள்ளத்தால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

ஐஐடி மெட்ராஸ் கல்லூரி அருகில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

Chennai:

சென்னையில் மத்திய கைலாஷ் சிக்னல் அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

 சென்னை மத்திய கைலாஷ் சிக்னலைக் கடந்துதான் ஓஎம் ஆர், ஈசிஆர், அண்ணா பல்கலைக் கழகம், அடையாறு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும்.

மத்திய கைலாஷ் சிக்னல் உள்ள சர்தார் பட்டேல் சாலையில் விழுந்த பள்ளத்தால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் அதை கவனித்து வருகின்றனர் என்று சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மாதிரி சம்பவம் இரண்டாம் முறையாக நடக்கிறது. 2017 ஆம் ஆண்இல் சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் பேருந்து மற்றும் கார் விழுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement