This Article is From Jun 20, 2020

“சீனா ஒரு முரட்டு நடிகர்“: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் தாக்கு!!

"சீன ராணுவம் (பி.எல்.ஏ-மக்கள் விடுதலை இராணுவம்) உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது தென் சீனக் கடலை இராணுவமயமாக்குகிறது மற்றும் சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது"

“சீனா ஒரு முரட்டு நடிகர்“: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கடும் தாக்கு!!

கொரோனா தொற்று குறித்து சீனா கவனமாக அனுகவில்லை என மைக் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • அமெரிக்கா, சீனாவை ஒரு முரட்டு நடிகர் என வரையறுத்துள்ளது.
  • சீனா, ஹாங்காங்கில் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது
  • சீன கம்யூனிஸ்ட்டு கட்சி மீறிய பல சர்வதேச ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று
Washington:

சமீபத்தில் லடாகின் கிழக்கு பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அமெரிக்கா, சீனாவை ஒரு முரட்டு நடிகர் என வரையறுத்துள்ளது.

முன்னதாக அமெரிக்க செனட்டர், சீனா இந்தியாவின் நிலப்பரப்புகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது என்கிற குற்றச்சாட்டினை முன் வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, “நேட்டோ போன்ற நிறுவனங்கள் மூலம் சுதந்திர உலகம் செய்துள்ள அனைத்து முன்னேற்றங்களையும் சீர்குலைக்கவும், சீனா இடம்பெறக்கூடிய புதிய விதிமுறைகளை உருவாக்கவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.“ என விமர்சித்துள்ளார்.

மேலும், "சீன ராணுவம் (பி.எல்.ஏ-மக்கள் விடுதலை இராணுவம்) உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது. இது தென் சீனக் கடலை இராணுவமயமாக்குகிறது மற்றும் சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது, முக்கிய கடல் பாதைகளை அச்சுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

2020 கோபன்ஹேகனில் ஜனநாயக உச்சி மாநாட்டின் போது, "ஐரோப்பா மற்றும் சீனா சவால்" என்கிற தலைப்பில், “சீன கம்யூனிஸ்ட் கட்சியானது சீன மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்“ என்று நம்புவதாக அமெரிக்க உயர்மட்ட தூதர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அவர்கள் ஒரு கூட்டுறவு உறவை விரும்புகிறார்கள் என்று எங்களுக்கு உறுதியளித்தனர். பல தசாப்தங்களாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் மிகுந்த நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ளன. இது ஷென்சென் போன்ற இடங்களுக்கு விநியோகச் சங்கிலிகளை அவுட்சோர்ஸ் செய்தது, பி.எல்.ஏ-உடன் இணைந்த மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களைத் திறந்தது. சீன ஆதரவுடன் தங்கள் நாடுகளில் முதலீடு செய்வதையும் ஐரோப்பிய நாடுகள் வரவேற்றது“ என்று மைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஆனால் சீனா, ஹாங்காங்கில் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐ.நா. பதிவு செய்த ஒப்பந்தத்தையும் அதன் குடிமக்களின் உரிமைகளையும் சீனா மீறியது. சீன கம்யூனிஸ்ட்டு கட்சி மீறிய பல சர்வதேச ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று“ என்றும் கூறினார்.

"சீன கம்யூனிட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், சீன முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு மிருகத்தனமான அடக்குமுறை பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாம் காணாத அளவில் மனித உரிமை மீறல். இப்போது, ​​பி.எல்.ஏ இந்தியாவுடனான எல்லை பதட்டங்களை அதிகரித்துள்ளது," என்றும் மைக் குறிப்பிட்டுள்ளார்.

“சீனா கொரோனா தொற்று பரவல் குறித்த பொய்களை பரப்பியதுடன் அதே நேரத்தில் WHO ஐ மூடிமறைக்கும் பிரச்சாரத்திற்கு உதவுமாறு அழுத்தம் கொடுத்தது. தற்போது சீனாவில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. உலக பொருளாதாரம் அழிந்துவிட்டது.“ என மைக் கூறியுள்ளார்.

"அமெரிக்காவைப் போலவே ஐரோப்பாவும் சீனா சவாலை எதிர்கொள்கிறது, நமது தென் அமெரிக்க, ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நட்பு நாடுகளும் இதை உணர்ந்துள்ளன. சீனாவுக்கு மாற்றாக வேறு ஒன்று தேவைப்படுகிறது.“ என உலக நாடுகள் வலியுறுத்துவதாக மைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மைக் வைத்துள்ள எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் அமெரிக்கா ஆதாரங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.