This Article is From Aug 21, 2020

சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ரவுடி சங்கர் இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபாரக் என்பவரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

சென்னை அயனாவரத்தில் பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

சென்னை கீழ்பாக்கத்தை அடுத்த நீயூ அவன்யூ சாலையில் ரவுடி சங்கர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் அங்கு சென்றுள்ளனர். 

அப்போது, ரவுடி சங்கர் இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபாரக் என்பவரை ரவுடி சங்கர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, போலீசாரை பாதுகாக்க ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில் படுகாயமடைந்த ரவுடி சங்கரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். எனினும், மருத்துவமனை செல்லும் வழியிலே சங்கர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ரவுடி சங்கர் மீது மூன்று கொலை முயற்சி வழக்கு, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரவுடி சங்கரின் உடல் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து என்கவுண்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Advertisement