சோயூஸ் விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வார்கள்.
Moscow: 2022ஆம் ஆண்டு இந்தியா விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு சோயூஸ் விண்கலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ரஷ்ய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அறிவித்தபடி, வருகிற 2022ஆம் ஆண்டு 75வது சுதந்திர தினத்தை இங்கு கொண்டாடும் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காகண்யான் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு பறப்பார்கள் என கூறியிருந்தார்.
இந்த சமயத்தில், இந்தியா விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்தில் நடைபெறும் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ரஷ்ய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா அளித்திருக்கும் இந்த வாய்ப்பு இந்திய விண்வெளி வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.