Read in English
This Article is From Jan 03, 2019

சபரிமலை விவகாரம் : சென்னையில் கேரள சுற்றுலாத்துறை அலுவலகம் மீது தாக்குதல்

சபரிமலை போராட்டக்காரர்கள் கேரள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவல்படி, சென்னையில் உள்ள அலுவலகத்தின் கண்ணாடிகள், செக்யூரிட்டி அறை உள்ளிட்டவை தாக்கப்பட்டுள்ளன.

Advertisement
இந்தியா

2 பெண்கள் நேற்று சபரிமலையில் தரிசனம் செய்தனர். இதையடுத்து வன்முறை ஏற்பட்டுள்ளது.

Chennai:

கேரள சுற்றுலாத்துறையால் இயக்கப்படும் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட தகவலின்படி, கேரள சுற்றுலாத்துறை அலுவலகத்தின் கண்ணாடிகள் மற்றும் செக்யூரிட்டி அறை உள்ளிட்டவை சேதம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கேரள சுற்றுலாத்துறை அலுவலகம் தாக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட என்று தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.
 

Advertisement
Advertisement