This Article is From Mar 28, 2019

ரயிலில் பெண் பயணிகளுக்கு தொந்தரவு அளித்த திமுகவை சேர்ந்தவர் கைது

கைதான சந்திரன், சூலூர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். கடந்த 8-ம்தேதி கட்சி கூட்டத்தை முடித்து விட்டு ரயிலில் வந்தபோது சம்பவம் நடந்திருக்கிறது.

ரயிலில் பெண் பயணிகளுக்கு தொந்தரவு அளித்த திமுகவை சேர்ந்தவர் கைது

சேலம் ரயில்வே போலீசார் சந்திரனை கைது செய்துள்ளனர்.

Coimbatore:

ரயிலில் பெண் பயணிகளுக்கு தொந்தரவு அளித்த திமுக உறுப்பினரும், முன்னாள் செயற்குழு உறுப்பினருமான சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சேலம் ரயில்வே போலீசார் கைது செய்து உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கடந்த 8-ம்தேதி திமுக கூட்டத்தை முடித்து விட்டு சந்திரன் சென்னையில் இருந்து ஊர் திரும்பியுள்ளார். அப்போது, ரயிலில் இருந்த பெண் பயணிகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. 

இதனால் கடுப்பான பெண் பயணி ஒருவர், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் சந்திரன் மற்றும் திமுகவை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் சந்திரன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் சந்திரனை நேற்று ரயில்வே போலீசார் கைது செய்து உள்ளூர் போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது முதல் தகவல் அறிக்கையான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

.