10 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சல்மான் கான், பிரபு தேவா கூட்டணியில் படம் ஒன்று வெளியாகவுள்ளது. வாண்ட்டட் படத்திற்கு பிறகு தபங் சீரிஸில் இருவரும் இணைய உள்ளதாக வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதார்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பிரபு தேவா இயக்கிய ஆக்ஷன் படமான (ரவுடி ரத்தோர் மற்றும் ஆர். ராஜ்குமார்) படத்திற்கு பின் தபங் 3 படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
நடிகர் சல்மான் கான் அர்பஸ் கானுடன் இணைந்திருக்கும் வீடியோ காட்சியை ட்விட்டரில் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக “மீண்டும் பிறந்த இடத்திற்கு தபங் 3 ஷூட்” என்று குறிப்பிட்டிருந்தார். தபங் சீரியஸில் முதல் இரண்டு சினிமாவினை சல்மானின் சகோதரர் அர்பஸ் கான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தாரன் ஆதார்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “முக்கிய செய்தி…. வாண்டட் படத்திற்கு அடுத்து 10 வருடத்திற்கு பின் சல்மான் கான் மீண்டும் பிரபு தேவாவுடன் இணைந்துள்ளார். இவர்கள் இணைந்து தபங் சீரியஸிற்காக இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் தபங் 3 படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்று கூறியுள்ளார்.
2009இல் வெளியான வாண்டட் திரைப்படம் சல்மான் கான் திரைவாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருந்தது. 2008 -ல் சல்மான் கானின் திரைப்படம் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. பிரபுதேவா இயக்கிய வாண்டட் திரைப்படம் சல்மான்கானுக்கு முதல் ஈத் பிளாக்பஸ்டராக அமைந்தது. சல்மான்கானுக்கு புதிய பேட்டனை உருவாக்கிய படமாக இருந்தது.
சல்மான் கானின் கடைசி படமான ரேஸ் 3 வெற்றிகரமான ஓடினாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டைக் கொடுக்கவில்லை. சல்மான் நடித்து வெளியீட்டிற்காக ‘பாரத்' படம் காத்திருக்கிறது. இந்த படத்தில் கத்ரீனா கைஃப், டிசா பட்டானி மற்றும் தபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வருட ஈத் பெருநாளையொட்டி வெளிவரவுள்ளது. இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ளார். அதுல் அக்னிகோத்ரி தயாரித்துள்ளார்.
தபங் 3 படத்திற்கு பின் சல்மான கான் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.