This Article is From Dec 03, 2018

நாகையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுறை

விடுமுறை அளிப்பது தொடர்பான உத்தரவை ஆட்சியர் சுரேஷ் குமார் பிறப்பித்துள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

நிவாரண பணிகள் காரணமாக நாகையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிவாரண முகாம்களாக செயல்படும் நாகை பள்ளிகளில் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
Advertisement