বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 30, 2019

6 வயது சிறுமியைக் கொலை செய்து உடலை புணர்ந்த நபர் கைது

இந்த சம்பவம் அவர்களுடைய பெற்றோர்கள் வேலை பார்க்கும் வயலில் இருந்து 600 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.பெற்றோர்கள் இருவரும் தினக்கூலிக்கு வேலை செய்யும் நபர்கள் ஆகும்.

Advertisement
இந்தியா Posted by
Haridwar:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் ஆறு வயது சிறுமியை கொலை செய்ததாக கடந்த வாரம் வாட்ச்மேன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்நபர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரித்வாரில் தன் கிராமத்தில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது  வெள்ளிக்கிழமையன்று காணாமல் போனதாக தெரிகிறது.  

குற்றவாளி சோனு  கிராமத்திற்கு அருகில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து     வந்துள்ளார். அந்த சிறுமியை வன்புணர்வு செய்ய முற்பட்டபோது அந்த குழந்தை கத்தி சத்தமிட்டுள்ளார். ஆனாலும் அவளை கொடூரமான வன்முறை மூலமாக பாலியல் துன்புறுத்தலை செய்துள்ளார். குற்றத்தை உறுதிபடுத்துவதற்கு தேவையான அனைத்து முக்கிய ஆதாரங்களையும் நாங்கள் சேகரித்துள்ளோம்” என்று ஹரித்துவாரின் மூத்த கண்காணிப்பாளர் ஜன்மேஜே கந்தூரி தெரிவித்துள்ளார்.  

அந்த சிறுமியுடன் விளையாடிய குழந்தைகளைக் கேட்ட போது கடைசியாக குற்றம் சாட்டப்பட்ட நபருடன் இருந்ததாக உறுதி செய்துள்ளனர். குற்றவாளியும் தன் குற்றத்தைக் ஒப்புக் கொண்டுள்ளார். முதலில் சிறுமியைக் கொன்று விட்டு பின் உடலுடன் பாலுறவு வைத்துக் கொண்டதாகக் கூறினார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

Advertisement

இந்த சம்பவம் அவர்களுடைய பெற்றோர்கள் வேலை பார்க்கும் வயலில் இருந்து 600 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது.பெற்றோர்கள் இருவரும் தினக்கூலிக்கு வேலை செய்யும் நபர்கள் ஆகும். சனிக்கிழமை காலை குற்றவாளி சோனு கைது செய்யப்பட்டு அந்தக் குழந்தையின் உடலை மீட்டுள்ளனர். 14 நாட்கள் காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

இறந்த சிறுமியின் குடும்பத்தார் அந்த வாட்ச் மேனுடன் மற்றொருவர் வந்து மூன்றுநாட்களுக்கு முன்பு வந்து சண்டையிட்டதாகவும் மூன்று நாள் வேலைக்கே செல்லவிடவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஆனால், காவல்துறையினர் மற்றொரு நபரை கைது செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். 

Advertisement

இரண்டாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

Advertisement