This Article is From Jan 30, 2019

'திருமுருகப் பெருவிழா'விற்கு சீமான் அழைப்பு..!

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில்தான் ‘வீரத் தமிழர் முன்னணி’-யை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் ஆரம்பித்தார். 

'திருமுருகப் பெருவிழா'விற்கு சீமான் அழைப்பு..!

நாம் தமிழர் கட்சியின் துணை அமைப்பான ‘வீரத் தமிழர் முன்னணி’ வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி, ‘திருமுருகப் பெருவிழா’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

ஹைலைட்ஸ்

  • பிப்ரவரி 3-ம் தேதி 'திருமுருகப் பெருவிழா' நடக்கிறது
  • கோவையில் இந்த விழா நடத்தப்பட உள்ளது
  • சீமான் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்

நாம் தமிழர் கட்சியின் துணை அமைப்பான ‘வீரத் தமிழர் முன்னணி' வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி, ‘திருமுருகப் பெருவிழா' நிகழ்ச்சியை நடத்த உள்ளது. அதற்கு தனது முகநூலில் வீடியோ வெளியிட்டு அழைப்பு விடுத்துள்ளார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

வீடியோவில் சீமான், ‘ஆண்டுதோறும் நடத்தப்படுகிற திருமுருகப் பெருவிழா, கோவையின் சிவானந்தா காலனியில் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி, மாலை 3 மணி அளவில் பேரெழுச்சியாக நடக்க இருக்கிறது. பல பெரு மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கிறார்கள். எனவே, அன்பு உறவுகள் அனைவரும் பேரெழுச்சியாக வந்து பங்கெடுக்க வேண்டுமென்று அன்போடு அழைக்கிறேன். பன்பாட்டுப் புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது. வாருங்கள். கூடிக் கொண்டாடுவோம். திருமுருகப் பெருவிழா' என்று பேசியுள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில்தான் ‘வீரத் தமிழர் முன்னணி'-யை சில ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் ஆரம்பித்தார். 
 

.