This Article is From Oct 16, 2018

கொலை வழக்கு: சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை!

வழக்கு விசாரணை 2014 முதல் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலை வழக்கு: சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை!

ராம்பால், 2014 ஆம் ஆண்டு, ஹிசாரில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டார்

New Delhi:

சென்ற வாரம் சாமியார் ராம்பால், இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியது ஹரியானா நீதிமன்றம். இந்நிலையில், தண்டனை குறித்தான விவரம் இன்று வெளியிடப்பட்டது. அப்போது ராம்பாலுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஹரியானாவில் இருக்கும் ஹிஸாரில் உள்ள கீழ்நிலை நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், ராம்பால் மற்றும் அவரது 26 பக்தர்கள் இரண்டு கொலை வழக்குகளில் குற்றவாளிகள் என்று சென்ற வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது. ஹிஸாரில் இருந்த ராம்பாலின் ஆசிரமத்தில் தங்கள் மனைவிகள் கொல்லப்பட்டதாக இரண்டு பேர் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை 2014 முதல் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

68 வயதாகும் ராம்பால், 2006 ஆம் ஆண்டு, கிராமத்தினர் சிலர் மீது தீ வைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார். 6 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 

ராம்பால், 2014 ஆம் ஆண்டு, ஹிசாரில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் கைது செய்யப்பட்டார். காவலர்கள் கைது செய்ய முயன்ற போது, ராம்பால் ஆதரவாளர்கள், அவர்கள் மீது கற்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் வைத்துத் தாக்குதல் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் ராம்பால், தனது ஆதரவாளர்களை மனித கேடயமாகக் கூட பயன்படுத்தினார். 
 

.