This Article is From Dec 29, 2018

ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது: செல்லூர் ராஜூ

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது: செல்லூர் ராஜூ

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

பல்வேறு ஊழல் வழக்குகள் திமுகவினர் மீது உள்ளது. எனவே தவறு செய்பவர்கள், திருடக்கூடியவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். யார் சிறைக்கு போவார்கள் என்று விரைவில் தெரியும். ஆகவே, ஸ்டாலின் ஊழல் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும்.

வருகிற பாராளுமன்ற தேர்தல்களுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் வியூகங்கள் வகுத்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிகாரப்பூர்வ குழு அமைத்து பேசுவார்கள்.

கஜா புயல் சேதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை தீவிரமாக செய்துள்ளது. மத்திய அரசு உதவியை எதிர்பார்க்காமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சி சார்பிலும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

.