This Article is From Feb 13, 2020

ஏர் இந்தியா தலைவராக மூத்த அரசு அதிகாரி ரஜீவ் பன்சால் நியமனம்!!

தற்போது ஏர் இந்தியாவின் தலைவராக இருக்கும் அஷ்வனி லோஹானியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

ஏர் இந்தியாவின் இடைக்கால தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ரஜீவ் பன்சால் செயல்பட்டிருக்கிறார்.

New Delhi:

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மத்திய அரசின் மூத்த அதிகாரி ரஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. 

1988-ம் ஆண்டு நாகலாந்து பிரிவின் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஜீவ் பன்சால். அவர் தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலராக பணிபுரிந்து வருகிறார். 

பன்சாலின் புதிய பதவியான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் கூடுதல் செயலருக்கு வழங்கப்படும் ஊதியம் அவருக்கு அளிக்கப்படும். இதைத் தவிர்த்து மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

தற்போது ஏர் இந்தியாவின் தலைவராக இருக்கும் அஷ்வனி லோஹானியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement
Advertisement