Read in English
This Article is From Oct 09, 2018

ஆளுநருக்கு எதிராக ‘அவதூறு’ கட்டுரை: ‘நக்கீரன்’ கோபால் கைது!

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் துறை, ஆளுநரை தரக்குறைவான வகையில் கோபால் கட்டுரையில் விமர்சித்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளது

Advertisement
தெற்கு

ஆளுநர் அலுவலகம் காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

Chennai:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதுக்கு எதிராக அவதூறான வகையில் கட்டுரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு, ‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆளுநர் அலுவலகம் காவல் துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அவர் சென்னையிலிருந்து புனேவுக்கு செல்ல விமான நிலையம் வந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையில் ஆளுநர் குறித்து அவதூறான கருத்து இருந்ததாக கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நக்கீரன் இதழில் தான், கோபால் எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து சென்னை காவல் துறை, ஆளுநரை தரக்குறைவான வகையில் கோபால் கட்டுரையில் விமர்சித்துள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement
Advertisement