বাংলায় পড়ুন Read in English
This Article is From Jun 22, 2020

எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தை

நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எல்லையில், பணியாற்றும் வீரர்களுக்கு ஆயுதங்கள் அளிப்பது  என்றும், மிக மோசமான நேரத்தில் இதனை  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா ,

Highlights

  • சீன எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது
  • கடந்த 6-ம்தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடந்தது
  • ஜூன் 15ல் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்
New Delhi:

லடாக்  எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக  இந்தியா - சீனா ராணுவ  உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் சீன எல்லைக்குள் அமைந்திருக்கும் மோல்டோ என்ற இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது.  இதில் துணை ராணுவ தளபதிகள் அளவிலான அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். 

கல்வான் தாக்குதல்,  எல்லையில் நடந்திருக்கும் அத்துமீறல்கள் உள்ளிட்டவை  தொடர்பாக இந்த கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

முன்னதாக கடந்த 6-ம்தேதி இதேபோன்ற ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இதில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் எல்லையில் குவித்த படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டன. 

Advertisement

இதன்பின்னர் கடந்த வாரம் திங்கட்கிழமை  இரவு  இரு  நாட்டு படைவீரர்களும் பரஸ்பரம் திரும்பிக் கொண்டிருக்கும்போது மோதல் ஏற்பட்டது. கற்கள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டவற்றால் சீன ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதில்  ராமநாதபுரத்தை சேர்ந்த வீரர் பழனி உள்பட 20 பேர் உயிரிழந்தார்கள். சமீப காலமாக இரு நாட்டு படைகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும்.  ஆனால் உயிரிழப்பு என்ற அளவுக்கு நிலைமை சென்றது கிடையாது.

Advertisement

கடைசியாக 1967-ல் ஏற்பட்ட மோதலின்போதுதான் உயிரிழப்புகள் நேர்ந்தன. அதன்பின்னர் சுமார் 43 ஆண்டுகள் கழித்து  சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் வீரர்கள் பலியாகி உள்ளனர். 

அதே நேரத்தில் 76 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. சீனா தரப்பில் உயிரிழப்பு  மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எல்லையில், பணியாற்றும் வீரர்களுக்கு ஆயுதங்கள் அளிப்பது  என்றும், மிக மோசமான நேரத்தில் இதனை  பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியும், எல்லையில் நிலைமைக்கேற்ப ராணுவம் முழு சுதந்திரத்துடன் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement

லடாக் எல்லை மட்டுமில்லாமல், சிக்கிம், அருணாசலபிரதேச எல்லைகளிலும் இதே நடவடிக்கை எடுக்குமாறு வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement