This Article is From Nov 22, 2018

ம.பி-யில் பேருந்து - பள்ளி வேன் மோதல்: 7 குழந்தைகள், டிரைவர் பரிதாப பலி!

மத்திய பிரதேச மாநில சாட்னாவில், பள்ளி வேன் மற்றும் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது

ம.பி-யில் பேருந்து - பள்ளி வேன் மோதல்: 7 குழந்தைகள், டிரைவர் பரிதாப பலி!

இந்த விபத்தில் வேனில் இருந்த 7 குழந்தைகள் மற்றும் டிரைவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. (கோப்புப் படம்)

மத்திய பிரதேச மாநில சாட்னாவில், பள்ளி வேன் மற்றும் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் இருந்த 7 குழந்தைகள் மற்றும் டிரைவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'சட்னா விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்துள்ளேன். விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள். விபத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்' என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

.