This Article is From Nov 08, 2018

கலிபோர்னியா பாரில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு!

கலிபோர்னியாவில் இருக்கும் 'பார்டர்லைன் பார் அண்ட் க்ரில்' என்ற பிரபல பாரில் நடந்துள்ளது.

கலிபோர்னியா பாரில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிச் சூடு நள்ளிரவு 11.30 மணி அளவில் நிகழ்ந்துள்ளது (File)

California:

தெற்கு கலிபோர்னியாவில் இருக்கும் இசை மற்றும் நடன பார் ஒன்றில் கடந்த புதன்கிழமை பாரில் இருந்த பலரர் பலத்த காயமடைந்திருந்தனர் என்று அமெரிக்க தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கலிபோர்னியாவில் இருக்கும் 'பார்டர்லைன் பார் அண்ட் க்ரில்' என்ற பிரபல பாரில் நடந்துள்ளது. அன்று கல்லூரி மாணவர்கள் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி கொண்டிருந்தார்கள்.

லாஸ் ஏஞ்சலின் டைம்ஸ் பத்திரிகைக்கு சட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "30 பேராவது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். எல்லோரும் இப்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள்" என்றார்.

#OaksInc: Firefighters and first responders are arriving on scene of a report of a shooting at an establishment in @CityofTO. PD is working to secure scene. Multiple injuries reported. @VCFD

பெயர் வெளியிடாத ஒருவர் கூறுகையில், "11.30 அளவில் ஒருவர் பாருக்குள் ஓடினார். உடனே அனைவரையும் தன் கையில் இருந்த கறுப்பு துப்பாக்கியில் சுட்டார்" என்றார்.

மேலும், "அவர் நிறைய முறை சுட்டார். குறைந்தது 30 முறை. அங்கிருந்து வந்த பிறகும் எனக்கு அந்த துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது" என்றார் அவர்

.