Read in English
This Article is From Oct 24, 2018

தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த 5 பேர் கைது

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
நகரங்கள்

கைதானவர்களில் ஒருவர் 16 வயது சிறுவன்

Thanjavur:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடிதாங்கி என்ற கிராமத்தில் பள்ளிப் படிப்பை நிறுத்தி 14 வயது சிறுமி ஒருவருக்கு 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளது. இங்கு கடந்த புதன் அன்று கண்ணன் (29 வயது), அவரது சகோதரர் மகேந்திரன் (35 வயது) ஆகியோர், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் இருந்து செல்போனை பிடுங்கியுள்ளனர். 

அதன்பின்னர் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். அவர்களுடன் சிவகுமார், வித்யா என்ற பெண் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரும் துன்புறுத்தியுள்ளனர். அவர்களில் வித்யா என்பவர் இரும்புக் கம்பியால் சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி, பின்னர் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Advertisement

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள், பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை காக்கும் சட்டம் (போக்சோ) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement