Sivaganga, Tamil Nadu:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் சரவணன், சிவகங்கையில் அடையாளம் தெரியாத சில நபர்களால் ஞாயிற்றுக் கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிகளை கைது செய்ய 4 சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சரவணன் காலையில் வாக்கிங் சென்ற போது கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொலைக்கான காரணம் என்ன என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.
அமமுக தலைவர்கள் குற்றவாளிகளை கைது செய்யாமல் சரவணின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
எஸ்.பி ஜெயச்சந்திரன் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசு மருத்துவமனையில் சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
COMMENTS
Advertisement