Read in English
This Article is From Oct 04, 2018

மலேசியாவில் 6 நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள் உயிரிழப்பு!

கோலாம்பூரில், மேற்கு பூஜாங் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 17வயது இளைஞர் மாயம்.

Advertisement
உலகம்

30 நிமிடம் கழித்து கரைக்கு கொண்டு வரப்பட்டபோது, சுயநினைவின்றி இருந்த நீர் மூழ்கி நீச்சல் வீரர்கள்.

Kuala Lumpur:

மீன்பிடிக்கச் சென்ற 17வயது இளைஞனை காணவில்லை என தகவல் கொடுக்கப்பட்டதும், அந்த இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 6 நீர் முழ்கி நீச்சல் வீரர்களை நீருக்குள் இறக்கி அந்த இளைஞரை தேட ஆரம்பித்தார்கள்.

அப்போது, ஏற்பட்ட சுழலில் 6 வீரர்களும் சிக்கினார்கள் என தீயணைப்பு துறையின் தலைவர் முகமது ஹமதன் வாஹித் கூறினார்.

மேலும், இதுகுறித்து போலீஸ் அதிகாரி அப்துல் ஆசிஸ் கூறும்போது, நீரோட்டத்தில் ஏற்பட்ட அழுத்தத்தால், 6 வீரர்களும் நீரில் மூழ்கினார்கள். 30 நிமிடம் கழித்து மீட்கப்பட்ட 6 வீரர்களும் சுயநினைவை இழந்திருந்தார்கள்.

ஒரே நாளில் 6 வீரர்களையும் இழந்தது பேரிழப்பு என்றார். மேலும், காணாமல் போன இளைஞர் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement