பாடகி சோனா மொஹாபத்ரா நீச்சலுடை அணிந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அவர் அணிந்திருந்த நீச்சல் உடை குறித்தும் அவரின் உடல்வாகு குறித்தும் நெட்டிசனகள் கடுமையாக கேலியும் அவமானத்தும் வகையிலான கமெண்டுகளையும் செய்திருந்தனர். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பதில் கூறி மீண்டும் தன்னுடைய நீச்சல் உடை அணிந்த் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். “நான் நன்றாக சாப்பிட்டு வளர்த்த வயிறு அதை சுருங்க வைக்க மாட்டேன்” என்று எழுதி பதிவிட்டுள்ளார்.
#MeToo இயக்கத்தின் வலுவான குரலாக பாடகி சோனா மொஹாபத்ராவின் குரல் ஒலித்தது. பலர் இந்த பதிவிற்கு இதயம் மற்றும் தீ வடிவிலான எமோஜிக்களை பகிர்ந்துள்ளனர். நான் எந்த சட்டகத்திலும் பொருந்த மாட்டேன் 2020 இதோ நான் வருகிறேன்! என்றும் எழுதியிருந்தார்.
நீச்சலுடை ஒன்றில் தன்னைப் பற்றிய கூடுதல் புகைப்படங்களைக் கொண்டு தன்னை வெட்கப்படுத்தியவர்களுக்கு சோனா மொஹாபத்ரா பதிலளித்தார்: "அனைவருக்கும் எழுத்துக்கும் நன்றி. முதல் வகை மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் யாராவது அவர்களுக்குக் கற்பிப்பார்கள் 'சம்மதம்' என்ற கருத்து மற்றும் உடையிலும ஒரு பெண்ணைத் தாக்கும் எவரையும் எவ்வகையிலும் நியாயப்படுத்தாது. 2020 இங்கே நான் வருகிறேன். "
பாடகி மொஹாபத்ரா தன்னை “சீரியசான நபர்” என்று வகைப்படுத்தியவர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் “ இரண்டாவது வகை மக்கள் ஒரு தீவிரமான, சிந்தனை, தீவிரமான, அன்பான, அல்லது முழுமையாக மூடி உடையணிந்த பெண், நீங்கள் சொல்லும் 'தகுதியான பெண்' ஆகும் யோசனை என்னிடம் இல்லை. உங்களுக்கு வழங்குவதற்கு மன்னிப்பும் இல்லை. " என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு முழுவதும் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக சோனா மொஹாபத்ரா பிரபலமடைந்தார். கபீர் சிங் திரைப்படம் குறித்து வெளியிட்ட விமர்சனம் பெரிதும் பேசப்பட்டது. அந்த திரைப்படம் பெண்களின் மீதான வன்முறையை ஊக்குவிப்பதாக தெரிவித்தார். சல்மான் கானை விமர்சித்ததும் அவர்களின் ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டலும் வந்துள்ளது.