Read in English
This Article is From Dec 03, 2018

புற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பாலிவுட் நடிகை

“சோனாலி பிந்த்ரே நலமுடன் இருக்கிறார். மிக விரைவாகவே நலமாகி விட்டார்." கணவர் கோல்டி பிஹல்

Advertisement
Entertainment Posted by

மும்பை ஏர்போர்ட்டில் நடிகை சோனாலி பிந்த்ரே

New Delhi:

நடிகை சோனாலி பிந்த்ரே தனக்கு ஏற்பட்ட கேன்சர் நோய்க்காக அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார். இன்று  சிகிச்சை முடிந்து இந்தியாவிற்கு வந்தடைந்தார். இன்று அதிகாலை சோனாலி பிந்த்ரே தன்கணவர் கோல்டி பிஹலுடன் மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்தடைந்தார். “சோனாலி பிந்த்ரே நலமுடன் இருக்கிறார். மிக விரைவாகவே நலமாகி விட்டார். ஆனால் புற்றுநோய் திரும்ப வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்” என்று சோனாலி பிந்தரேவின் கணவர் ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார்.

சோனாலி பிந்த்ரே மும்பை ஏர்போர்ட் வந்தடைந்த புகைப்படத்தை தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து, “என் மனம் எங்கிருந்ததோ அதே இடத்திற்கு திரும்ப வந்துவிட்டேன். இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது. என் போஸ்டைத் தவிர மற்ற அனைவரின் போஸ்ட்களையும் படிக்கப்போகிறேன் ” என நெகிழ்ந்திருந்தார்.

 மும்பை ஏர்போர்ட் வந்திறங்கிய சோனாலி பிந்த்ரே

 

மும்பை ஏர்போர்ட்டில் சோனாலி பிந்த்ரே

Advertisement

 தன் கணவருடன் சோனாலி பிந்த்ரே

 

Advertisement

 

 

43 வயதுடைய சோனாலி பிந்த்ரே கடந்த ஜூலை மாதத்தில் தனக்கு ஹை கிரேட் கேன்சர் இருப்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்தார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சில நேரங்களில் வாழ்க்கை நம் எதிர்பார்ப்புகளையெல்லாம் துடைத்து எறிந்து விடும். சமீபத்தில்தான் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

 

Advertisement

சிகிச்சைகாக நியு யார்க்கில் இருந்த போது பிரியங்கா சோப்ரா மற்றும் சோஃபியா டர்னருடன் பல இடங்களுக்கு சென்றார். அங்கிருந்த நடிகர் ரிஷி கபூரையும் சந்தித்தார். பிரியங்கா சோப்ரா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டார் சோனாலி பிந்த்ரே.

 

 

Advertisement

 

 

Advertisement