Read in English
This Article is From Dec 16, 2018

கலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி!

செம்மொழியான தமிழ்மொழி பாடல் இசைக்க கலைஞர் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

Advertisement
தெற்கு Posted by

செம்மொழியான தமிழ்மொழி பாடல் இசைக்க கலைஞர் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அருகிலேயே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 8 அடி உயர கருணாநிதியின் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சிற்பி தீனதயாளன் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டு புனரமைக்கப்பட்டது.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை திறந்து வைக்க அகில இந்திய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், திமுகவின் அழைப்பை ஏற்று இந்த சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, இன்று மாலை 4.30 அளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சோனியா, ராகுல் இருவரும் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஒய்வு பெற்று, சரியாக 5.00 மணி அளவில் இருவரும் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் வந்தடைந்தனர். அங்கு செம்மொழியான தமிழ்மொழி பாடல் பின்னணியில் இசைக்க கலைஞரின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.

இந்த சிலை திறப்பு விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பிரனாயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

Advertisement
Advertisement