This Article is From Oct 01, 2018

ஏகே 47 துப்பாக்கிகளுடன் தப்பித்த காவலர், ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்தார்!

எஸ்.பி.ஓ போலீஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது

ஏகே 47 துப்பாக்கிகளுடன் தப்பித்த காவலர், ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்தார்!

எம்.எல்.ஏ-வின் பாதுகாப்புக்காக இருக்கும் 10 செக்யூரிட்டிகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Srinagar:

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு காவல் படையிலிருந்து எஸ்.பி.ஓ போலீஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அந்த போலீஸ், 8 ஏகே 47 துப்பாக்கிகளுடன் தப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச் சென்ற காவலர் பெயர் அதில் பஷீர். அவர் ஹிஸ்புல் கமாண்டர், ஜீனத் உல்-இஸ்லாமுடன் ஒரு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாள்ளார். அந்தப் படம் கடந்த சில நாட்களாக வைரலாகி வந்தது.

இந்த விவகாரம் குறித்து போலீஸ், ‘எம்.எல்.ஏ அய்ஜிஸ் மிர், வீட்டிலிருந்து தான், ஏகே 47 துப்பாக்கிகளுடன் பஷீர் தப்பித்துள்ளார். ஷோபியன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபரின் உதவியோடு தான் பஷீர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளார். செப்டம்பர் 28-ல் அவர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் நடக்கும் போது எம்.எல்.ஏ, ஜம்மூவில் இருந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ-வின் பாதுகாப்புக்காக இருக்கும் 10 செக்யூரிட்டிகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

.