Read in English বাংলায় পড়ুন
This Article is From Oct 17, 2018

ராணுவ மருத்துவமனையில் பேசும்-கேட்கும் திறனற்ற பெண் 4 ராணுவ வீரர்களால் கற்பழிப்பு!

பாதிக்கப்பட்ட பெண் இந்தூரில் உள்ள என்ஜிஓ-வை அணுகியுள்ளார்

Advertisement
இந்தியா

30வயதான அப்பெண் ராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

Pune:

மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில், பணிபுரிந்து வந்த பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற பெண் ஒருவரை 4 ராணுவ வீரர்கள் கற்பழித்துள்ளனர்.

இச்சம்பவம் மூன்று வருடங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளதாக போலீசார் கூறினர்.

2014ம் ஆண்டு பூனேயிலுள்ள ராணுவ மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அப்பெண் 2015ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரில், இரவு நேர பணியில் இருந்த போது, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்

Advertisement

கற்பழிப்பதற்கு முன் அப்பெண்ணை மிரட்டியுள்ளதாக கூறியுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, மேலும் இரண்டு பேர் அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement