Read in English
This Article is From Nov 30, 2018

இலங்கை நம்பிக்கையில்லா தீர்மானம்: பேரம் பேசப்பட்ட எம்.பிக்கள்!

ரணிலை ஆதரித்து தமிழ் தேசிய கட்சியினரும், ஜனதா விமுகியும் வாக்களித்தனர் என்று ஸிஹூவா செய்தி தெரிவிக்கிறது.

Advertisement
உலகம்

அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக அக்டோபர் 26ம் தேதி முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார்.

Colombo:

இலங்கை அரசியலில் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பலர் பணம் வாங்கிக்கொண்டு தான் வாக்கெடுப்பை தள்ளிப்போட நினைத்தார்கள் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணம் பிரதமர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 123 பேர் ஆதர‌வு ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அளிக்கப்பட்டது என்று ரவி கருனானயகே தெரிவித்தார். இவர் ரணில் தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்.

ரணிலை ஆதரித்து தமிழ் தேசிய கட்சியினரும், ஜனதா விமுகியும் வாக்களித்தனர் என்று ஸிஹூவா செய்தி தெரிவிக்கிறது.

Advertisement

சபாநாயகர் கரு ஜெயவர்த்தனே ராஜபக்சே அரசை ஏற்காமல் இருந்தார். ராஜபக்சே ஆதரவாளர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். 

அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக அக்டோபர் 26ம் தேதி முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். மேலும் சபாநாயகரின் நடவடிக்கைகளை கண்டித்து அவர் தங்களை ஏற்கும் வரை அவையை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.

Advertisement

இதனை ராஜபக்சே கட்சியை சேர்ந்த திஸானயகே ''ரணிலின் வெற்றியை ஏற்க முடியாது. அது சட்டத்துக்கு புறம்பானது'' என்று கூறியுள்ளார். 

Advertisement