This Article is From Jan 04, 2019

சபரிமலை கோயிலுக்குள் 3வது பெண் நுழைந்தார்..!

நேற்று இரவு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நேற்று இரவு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த இலங்கையைச் சேர்ந்த சசிகலா என்னும் 46 வயது மதிக்கத்தக்கப் பெண், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, ஐயப்பனை தரிசனம் செய்யும் மூன்றாவது பெண் ஆவார்.

ஐயப்பன் கோயிலுக்கு முன்னர் இருக்கும் படிகளை சசிகலா எறியதாக சொல்கிறார். ஆனால், ஆலயத்திற்குள் அவர் அனுமதிக்கப்படவில்லையாம். இது குறித்து அந்தப் பெண்ணே கூறுகையில், “நான் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர்தான் சபரிமலைக்கு வந்தேன். 18 படிகளைக் கூட என்னை இங்கிருப்பவர்கள் ஏற விடவில்லை. நான் ஒரு உண்மை ஐயப்ப பக்தர்” என்று குமுறியுள்ளார்.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சிந்து மற்றும் கனகதுர்கா என்ற 2 இள வயதுப் பெண்கள், சாமி தரிசனம் செய்தனர். ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம்' என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பளித்த பின்னர், முதன்முறையாக கோயிலுக்குள் சென்றது இந்த இரண்டு பெண்கள்தான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் சென்றது குறித்து பினராயி விஜயன், ‘நேற்று ஐயப்பன் கோயிலுக்குள் சென்ற பெண்களுக்கு, பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், பக்தர்கள் அந்த இரு பெண்களுக்கும் உதவி செய்தனர். ஆனால், இதை வைத்து சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து வன்முறை செய்து வருகின்றனர்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.