This Article is From Aug 23, 2018

தமிழக மீனவர் படகை நடுக்கடலில் மூழ்கடித்த இலங்கை கடல்படை: ஆறு மீனவர்கள் கைது

தமிழக மீனவர்கள் ஆறு பேர் சென்ற இயந்திரப் படகின் மீது இலங்கைக் கடற்படையின் கப்பல் மோதி மூழ்கடித்துள்ளது

Advertisement
இந்தியா Posted by

நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் ஆறு பேர் சென்ற இயந்திரப் படகின் மீது இலங்கைக் கடற்படையின் கப்பல் மோதி மூழ்கடித்துள்ளது.

“புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள், நேற்று இரவு பலத்த காற்று வீசியதாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாலும் இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போதுதான் இலங்கைக் கடற்படையினர் இவர்களின் மீன்பிடி படகு மீது மோதித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது” என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் குமரேசன் தெரிவித்தார்.

“இந்நிலையில் உயிருக்குப் போராடிய மீனவர்களைக் காப்பாற்றி இலங்கைக் கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டுசென்றனர். மல்லகம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்றும் குமரேசன் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறப்பட்டு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement