This Article is From Sep 01, 2018

"விவசாயிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும்" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்

சேலம்: தமிழக விவசாயிகளுக்கு மாநில அரசு துணை நிற்கும் இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அனுப்பூரில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா, அம்மா உடற் பயிற்சி மையத்தை இன்று திறந்து வைத்த முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது. எனவே, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் முன்னுக்கு வர வேண்டும். உழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பட தேவையான நலத்திட்டங்களுக்கும் தமிழக அரசு ஆதரவு அளிக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், "நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். நான் ஒரு விவசாயியாக இருந்தவன். இன்றைக்கும் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். விவசாயிகளின் பிரச்சனைகளை நான் உணர்ந்தவன். எனவே, விவசாய மக்களின் நலனிற்கு தமிழக அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.