New Delhi:
தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவரான பி.சி. மோகனன் மற்றும் உறுப்பினரான ஜே.பி. மீனாட்சி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருந்தது. இந்த விவகாரத்தில் மோகனன் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மோகனன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து என்.டி.டி.வி.-க்கு அளித்த பேட்டியில், தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை என்றும், கடந்த சில மாதங்களாக தாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார்.
மோகனனை தவிர்த்து புள்ளியியல் ஆணைய உறுப்பினராக இருந்த ஜே.வி. மீனாட்சியும் பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் புள்ளியியல் துறை செயலர் பிரவின் ஸ்ரீவஸ்தவா ராஜினாமா செய்த இருவரையும் கூட்டத்திற்கு அழைத்துள்ளார்.
Advertisement
COMMENTS
Advertisement