கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகரும் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ''நாளை காலை 10 மணி அளவில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் கூட்டம், ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் வரவிருக்கின்ற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.'' என்று கூறியுள்ளார்.