This Article is From Dec 15, 2018

ஸ்டெர்லைட் : முதல்வர் மேல்முறையீடு செய்வதாக கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் : முதல்வர் மேல்முறையீடு செய்வதாக கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த அதிகாரிகள் தந்த தகவலின் பேரிலேயே பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் பாஜகவுக்கு மாற்று கருத்து இல்லை. பசுமை தீர்ப்பாயம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக முதல்வர் கூறியதை பொறுத்திருந்து பார்ப்போம்.

5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க அதிக அளவில் வெற்றி பெறும்.

பெட்ரோல் டீசல் விலையை பொறுத்தவரை பத்து ரூபாய்க்கு மேல் மத்திய அரசின் நடவடிக்கையால் குறைந்துள்ளது. கடந்தகால ஆட்சிகளில் இது போன்று பெரிய அளவில் விலையை குறைத்தது இல்லை. மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

.