Vadodara: குஜராத் மாநிலம் வதோத்ராவில், மாணவர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் கொலை செயப்பட்டு கிடந்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
14 வயதான அந்த மாணவர், பள்ளி கழிவறையில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களோடு, சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குர்கானில் உள்ள ரையன் சர்வதேச பள்ளியில் பிரத்யூமன் தாக்கூர் என்ற மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தை, இன்றைய சம்பவம் நினைவுபடுத்துகிறது. பிரத்யூமன் தொண்டையில் வெட்டப்பட்ட நிலையில் கழிவறையில் சடலமாக மீட்க்கப்பட்டார். இந்த சம்பவம் கடும் சர்ச்சையும், பள்ளியின் பாதுகாப்பின்மை பற்றிய விவாதத்தையும் ஏற்படுத்தியது.
குர்கான் வழக்கில், முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு, கொலை செய்தது அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன் என்று கண்டுபிடித்துள்ளது. அந்த வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
14 வயதான அந்த மாணவர், பள்ளி கழிவறையில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களோடு, சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குர்கான் வழக்கில், முதலில் பள்ளியின் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு, கொலை செய்தது அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன் என்று கண்டுபிடித்துள்ளது. அந்த வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
COMMENTS
Advertisement