Read in English
This Article is From Aug 21, 2018

பாலியல் புகார் அளித்ததால் மாணவி அடித்து கொலை - மத்திய பிரதேசத்தில் கொடூரம்

23 வயது கல்லூரி மாணவி பட்டப்பகலில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
இந்தியா
Seoni, Madhya Pradesh:

மத்திய பிரதேசத்தில், பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளித்த 23 வயது கல்லூரி மாணவி பட்டப்பகலில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரே, வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தி அவரை அடித்துக் கொன்றுள்ளார்.

சியோனி என்ற ஊரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை, அனில் மிஷ்ரா என்ற அந்த நபர், முடியை பிடித்து இழுத்துச் சென்றுள்ளார். பின் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். அப்பெண் அளித்த புகாரை வாபஸ் பெற மிஷ்ரா வற்புறுத்தியதும் தெரிய வந்துள்ளது. அந்த மாணவி படித்து வந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசு கல்லூரிக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

கல்லூரிக்கு வெளியே பைக்கில் காத்திருந்த அனில் மிஷ்ரா, மாணவி வந்ததும், முடிய பிடித்து இழுத்துச் சென்று, அருகில் இருந்த பெரிய கல்லை தலையில் போட்டு இந்த கொடூரத்தை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அருகிலிருந்தவர்கள் அனில் மிஷ்ராவை தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மிஷ்ரா இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement