This Article is From Dec 07, 2019

சுந்தர் பிச்சையின் பெயரை தவறாக வெளியிட்ட வால் ஸ்ட்ரீட் பத்திரிகை

சுந்தர் பிச்சையின் பெயரை ‘பின்சை’ என்று தவறாக எழுதியது. இந்த எழுத்துப்பிழை வாசகர்களால் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. பலரும் இதை கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சுந்தர் பிச்சையின் பெயரை தவறாக வெளியிட்ட வால் ஸ்ட்ரீட் பத்திரிகை

சிலர் பிழையை “அவமரியாதை” என்று விமர்சித்தனர்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் சுந்தர் பிச்சை (47), தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகமெங்கும் இந்த செய்தி தலைப்பு செய்தியாக வெளியானது. செய்திதாள் ஒன்றில் சுந்தர் பிச்சையின் பெயரை ‘பின்சை' என்று தவறாக எழுதியது. இந்த எழுத்துப்பிழை வாசகர்களால் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.  பலரும் இதை கேலி செய்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

“கூகுளின் நிறுவனர்கள் உயர்ந்த வேலையை விட்டுக் கொடுத்து விட்டனர்” என்ற தலைப்புடன் வெளியிட்ட செய்தியில் இந்த தவறாக சுந்தர் ‘பின்சை' என்று வெளியிட்டது. 

எழுத்துப் பிழையை உடனடியாக ட்விட்டர் பயனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, எழுத்துப் பிழையை நகைச்சுவையாக பல ஜிவ்களையும் கேலி செய்தனர். சிலர் பிழையை “அவமரியாதை” என்று விமர்சித்தனர். 

Click for more trending news


.