நடிகை சன்னி லியோன் வேறொருவர் வரைந்த ஓவியத்தை திருடி வரைந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
சன்னி லியோன் தன் கனவருடன் துபாயில் விடுமுறையைக் கழிக்க சென்றுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் Diet Sabya எனும் அக்கவுண்ட் வெளியிட்டுள்ள பதிவில் சன்னி ‘வேறொரு கலைஞரின் ஓவியத்தை திருடி' வரைந்ததாக கூறியுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Diet Sabya என்பது வேறொருவரின் படைப்பை காப்பி அடுத்து தன் படைப்பாக வெளியிடும் விஷயங்களை வெளிச்சப்படுத்தும் Instagram அக்கவுண்ட் ஆகும். இந்நிலையில், சன்னி லியோன் சமீபத்தில் வேறொருவரின் ஓவியத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து, உன்மையான படைப்பாளியின் பெயர் குறிப்பிடாமல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதற்கு Diet Sabya “நாம் அனைவருமே உதவ இருக்கிறோம், ஆனால் ஒரு கலைஞரின் அசல் படைப்பை - credit இல்லாமல் திருடுவது மற்றும் அதை தொண்டுக்காக ஏலம் விடுவதும், அசிங்கம்” என கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த சன்னி “ஹெலோ, சரியான தகவலை வழங்குவதற்காக, இந்த ஓவியத்தின் புகைப்படத்தை வெளியிட்டேன். எந்த நேரத்திலும் இது என்னுடைய ஐடியா என கூறவில்லை. நான் பார்த்த மற்றும் நேசித்த ஒரு கலையை வெறுமனே வரைந்தேன். இது புற்றுநோயாளிகளுக்கு நன்கொடை அளிக்கப்படுவதால், இதை ஒரு பாராட்டுதலுக்குறியதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. மன்னிக்கவும், தேவையுடைய குழந்தைகளுக்கு உதவ என்னுடைய மறுபதிப்பை நீங்கள் விரும்பவில்லை. இந்த ஓவியம் உங்களைப் பற்றியோ அல்லது என்னை பற்றியோ அல்ல. இது உதவும் முயற்சி தான்!” என்று கூறியுள்ளார்.