This Article is From Aug 28, 2019

ஜம்மு காஷ்மீருக்கு செல்ல சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!!

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராயம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு செல்ல சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டன.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்திக்க விரும்பும் மாணவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆகியோர் காஷ்மீருக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், 'மனுதாரரான மாணவர் முகம்மது அலீம் சயீது ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சென்று அவரது பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். சந்தித்த பின்னர் பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனது கட்சி நிர்வாகியான முகம்மது யூசுப் தாரிகமியை சந்திக்க காஷ்மீர் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தொடர்ந்த வழக்கில், 'நீங்கள் (யெச்சூரி) காஷ்மீருக்கு செல்லலாம். நீங்கள் உங்களது நண்பரை மட்டும்தானே சந்திக்கப் போகிறீர்கள்? இந்திய நாட்டின் குடிமகன் தனது நண்பரை சந்திக்க செல்கிறார். இதில் என்ன இடையூறு இருக்க முடியும்? ' என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், அரசியல் தலைவர் ஒருவர் காஷ்மீருக்கு செல்வது என்பது அங்கு பிரச்னையை இன்னும் தீவிரம் அடையச் செய்யும். எனவே யெச்சூரியை காஷ்மீர் செல்ல அனுமதிக்க கூடாது என்றார். இருப்பினும் யெச்சூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி, தனது காஷ்மீர் நண்பர் யூசுப் தாரிகமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது மத்திய அரசு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் யெச்சூரி காஷ்மீர் செல்வதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாக காஷ்மீருக்கு செல்ல யெச்சூரி 2 முறை முயற்சி செய்தார். அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.