This Article is From Nov 26, 2019

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!!

Maharashtra: அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

Maharashtra: எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.

New Delhi:

மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்றைய தினம் சுமார் 80 நமிடங்களுக்கு மேலாக நடந்த விசாரணையில், இந்த வழக்கில் இறுதி முடிவு இன்று எட்டப்பட்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

நேற்றைய வாதத்தின் போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

முன்னதாக, இந்த ஆதரவு கடிதத்தை நீதிபதிகள் தாக்கல் செய்ய கூறியதை தொடர்ந்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

இதுதொடர்பாக அஜித்பவார் கடந்த 22ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததன் பேரில் பாஜக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தது. இதைத்தொடர்ந்தே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த கடிதத்தில், முன்னதாக எங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்தது. நிலையான ஆட்சி அமைய நாங்கள் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக முகுல் ரோஹத்கி தெரிவித்தார். ஆளுநர் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை அறிந்த பின்னரே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்று கூறினார். 

இதைத்தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடனடியாகத் தயாரா என நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். அதற்கு அவகாசம் தேவை என பாரதிய ஜனதா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார். 

தொடர்ந்து, வாதிட்ட சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், சிவசேனா கூட்டணி ஆட்சியமைப்பதைத் தடுக்கவே அவசரமாக ஆளுநர் முடிவெடுத்துள்ளார் என்றும் காலை 5.47 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கும் அளவுக்கு, இது அவசர நிலையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தற்காலிக சபாநாயகரை நியமித்து, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். கட்சி பேதமின்றி மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை பேரவையின் தற்காலிகத் தலைவராக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்

.