This Article is From Mar 17, 2020

பெண் அதிகாரிகள் ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பயணிக்க முடியும்: உச்சநீதிமன்றம்

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வானது, தேசத்திற்குச் சேவை செய்த பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை மறுப்பது என்பது நீதிக்கு இழைக்கப்படும் அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகள் ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பயணிக்க முடியும்: உச்சநீதிமன்றம்

பெண் அதிகாரிகள் போர்க்கப்பல்களில் பணியாற்றலாம் என்று அரசு நீதிமன்றத்தில் கூறியது.

ஹைலைட்ஸ்

  • Men and women officers should be treated equally, the court said
  • Denying permanent commission serious miscarriage of justice, top court
  • Women officers can work in warships, government told Supreme Court
New Delhi:

பெண் அதிகாரிகள் ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பயணிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியக் கடற்படையில் பெண்களுக்கான நிரந்தர ஆணையத்தை அனுமதித்து, ஆண்கள் மற்றும் பெண் அதிகாரிகளைச் சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

"அவர்கள் ஆண் அதிகாரிகளைப் போலவே திறமையுடன் பயணிக்க முடியும்" என்று உயர் நீதிமன்றம் கூறியது, 2008 க்கு முன்னர் சேர்க்கப்பட்ட பெண் அதிகாரிகளைக் கடற்படையில் நிரந்தர ஆணையம் வழங்குவதைத் தடுக்கும் சட்டத்தினை ரத்து செய்தது.

கடற்படையில் பெண்களுக்கான நிரந்தர ஆணையத்தை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்துமாறு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதோடு, பெண் அதிகாரிகள் போர்க்கப்பல்களில் பணியாற்றலாம் என்று அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வானது, தேசத்திற்குச் சேவை செய்த பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை மறுப்பது என்பது நீதிக்கு இழைக்கப்படும் அநீதி என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண் அதிகாரிகளை அனுமதிக்க சட்டரீதியான தடையை நீக்கியவுடன், நிரந்தர ஆணையம் வழங்குவதில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் சமமாகக் கருதப்பட வேண்டும், ”என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படையில், பெண்கள் போர் விமானிகளாக பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கடற்படை பெண் விமானி - சப்-லெப்டினன்ட் சிவாங்கி - கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி கொச்சி கடற்படைத் தளத்தில் தனது பணியைத் தொடங்கினார். அவர் இந்தியக் கடற்படையின் டோர்னியர் கண்காணிப்பு விமானத்தை இயக்கி வருகிறார்.

ஆகஸ்டில், இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் எஸ்.தாமி ஒரு பிரிவின் விமான தளபதியாக நாட்டின் முதல் பெண் அதிகாரியாக ஆனார். டெல்லிக்கு அருகிலுள்ள காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்தில் சேடக் ஹெலிகாப்டர் பிரிவின் விமான தளபதியாக விங் கமாண்டர் தாமி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

.