This Article is From Jan 08, 2019

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisement
Tamil Nadu Posted by

ஸ்டெர்லைட் காப்பர் ஆலை விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக அதனை திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கனவே அதனைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. அந்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் கடந்த மே மாதத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியா அரசாணை பிறப்பித்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் நாடியது. இதில் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement

இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.

Advertisement