சபரிமலையில் (Sabarimala) உள்ள ஐயப்பன் கோயிலில் (Iyappa temple) அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாமா என்பது குறித்தும், ரஃபேல் ஒப்பந்த (Rafale Deal) விவகாரம் தொடர்பாக விசாரணை வேண்டுமா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் (Supreme Court), தனது தீர்ப்பை நாளை தெரிவிக்க உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றம், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் நுழையலாம் என்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை முடிந்து அது குறித்து உத்தரவு வழங்கப்பட இருக்கிறது.
அதேபோல ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், ரஃபேல் குறித்து விசாரணை வேண்டாம் என்று கூறியது. அது குறித்தான மேல் முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது உச்ச நீதிமன்றம்.