Read in English
This Article is From Sep 30, 2019

2 மாத குழந்தையுடன் கர்நாடகாவின் உயரமான மலை உச்சிக்கு சென்ற சூர்யா பட நடிகை!!

சூர்யா ஹீரோவாக நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழ்நாட்டில் ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியவர் சமீரா ரெட்டி. அவர் செய்திருக்கும் சாகசம் விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

2 மாத குழந்தை நைராவுடன் சமீரா ரெட்டி

New Delhi:

தனது 2 மாத பச்சிளம் குழந்தையுடன், நடிகை சமீரா ரெட்டி கர்நாடகாவின் உயரமான மலைச் சிகரத்திற்கு சென்றுள்ளார். அவரது இந்த சாகசம் இணையதளங்களில் விமர்சனத்தை உண்டாக்கி வருகிறது. 

சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சமீரா ரெட்டி. அவரது மேக்னா கேரக்டர் பாதியளவே படத்தில் வந்தாலும், அது தமிழ்நாட்டில் ரசிகர்களை ஈர்த்தது. 

2013-ல் அக்சய் வர்தே என்பவரை திருமணம் முடித்த சமீராவுக்கு 2015-ல் ஹன்ஸ் வர்தே,என்ற மகன் பிறந்தார். தற்போது மீண்டும் அவருக்கு நைரா என்ற குழந்தை பிறந்துள்ளது. சாகசப்பிரியரான சமீரா, 2 மாத குழந்தையுடன் கர்நாடகாவின் உயர்ந்த சிகரமான முல்லயநாகிரிக்கு சென்றுள்ளார். 
 

Advertisement

இந்த மலை சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரத்தில் உள்ளது. 2 மாத குழந்தையுடன் சிகரத்தின் உச்சியில் நிற்கும் காட்சியை சமீரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 
 

குழந்தையை பெற்று விட்டு மாதக்கணக்கில் ஓய்வெடுக்கும் சிலருக்கு மத்தியில், 2 மாதங்களிலேயே சமீரா இப்படியொரு சாகசத்தை செய்துள்ளார். 

Advertisement

இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் அவரை சிறந்த தாய், வலிமையான பெண்மணி என்று புகழ, இன்னொரு தரப்பினர் 2 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இப்படியொரு சாகசம் தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர். 

Advertisement