বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 21, 2020

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ஊழியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

இந்த குழுவில், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தடயவியல் நிபுணர்கள் அணியும் ஒரு அங்கம் வகிக்கின்றர். 

Advertisement
இந்தியா Posted by

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ஊழியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Mumbai/ New Delhi:

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பையில் 10 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் சுஷாந்த் சிங் ஊழியர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க காவல் கண்காணிப்பாளர் நூப்பூர் பிரசாத் தலைமையிலான அணி நேற்றிரவு மும்பை வந்தடைந்தது. இதையடுத்து, சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரி பிராத் இன்று காலை மும்பை காவலர்களை சந்தித்து அவர்களிடமிருந்து பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை பெற்றுள்ளார். 

இந்த குழுவில், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தின் (CFSL) தடயவியல் நிபுணர்கள் அணியும் ஒரு அங்கம் வகிக்கின்றர். 

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டது. தொடர்ந்து, மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Advertisement

மேலும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிரா அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக வேறு ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதுவும் சிபிஐ மூலம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement