Read in English
This Article is From Oct 05, 2019

2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த Sye Raa Narasimha Reddy - குஷியில் சிரஞ்சீவி குடும்பம்!

Sye Raa Narasimha Reddy திரைப்படம், உய்யல்வாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தியது

Advertisement
Entertainment Edited by

திரைப்பட வசூல் நிலவரங்களை ஆராயும் வல்லுநரான ரமேஷ் பாலா, Sye Raa Narasimha Reddy, 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக உறுதி செய்துள்ளார். 

Highlights

  • Sye Raa Narasimha Reddy, 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது
  • Surender Reddy, இப்படத்தை இயக்கியுள்ளார்
  • சிரஞ்சீவியின் மகன் Ram Charan தான் இப்படத்தை தயாரித்துள்ளார்
New Delhi:

“வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் விட்டுப் போகல” என்கிற வசனம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மட்டுமல்ல, மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும் பொருந்தும். சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் Sye Raa Narasimha Reddy. வெளியான 2 நாட்களில் உலக அளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துள்ளது ‘சைரா' படம். இதைக் கொண்டாடும் வகையில் சிரஞ்சீவியின் உறவினர்களான அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர், சக்ஸஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிரஞ்சீவி, படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண், நடிகர்களான அகில் அகினேனி, வருண் தேஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் படக்குழுவினரும் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் மத்தியில் ‘சக்ஸஸ் மீட்'-யும் நடத்தி முடித்துள்ளனர். 

திரைப்பட வசூல் நிலவரங்களை ஆராயும் வல்லுநரான ரமேஷ் பாலா, Sye Raa Narasimha Reddy, 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக உறுதி செய்துள்ளார். 

சக்ஸஸ் பார்ட்டி கொண்டாட்டங்களின் சில புகைப்படங்கள் இதோ:
 

Advertisement

Advertisement

Advertisement

சைரா திரைப்படம், உய்யல்வாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தியது. உய்யல்வாடா, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக தீர்க்கமாக போரிட்டவர். முதல் சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே உய்யல்வாடா, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியவர். சைரா படத்தில் சிரஞ்சீவியைத் தவிர தமன்னா, அனுஷ்கா, அமிதாப் பச்சன், சுதீப், ஜகபதி பாபு, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

Advertisement