தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் (Mechanical Engineer), தண்ணீரில் செயல்படக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியாளரான சவுந்திரராஜன் குமாரசாமி என்பவர்தான் இந்த தனித்துவமான கண்டுபிடிப்பிற்குப் பின் இருப்பவர். இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த இயந்திரத்தை உருவாக்க எனக்கு பத்து வருடங்கள் தேவைப்பட்டன. உலகிலேயே, இந்த மாதிரியான கண்டுபிடுப்புகளில் இதுவே முதல் கண்டுபிடிப்பு. இந்த இயந்திரம் ஹைட்ரஜனை எரிபொருளாக எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளிப்படுத்தும்." என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த இயந்திரம், சில நாட்களுக்கு முன்னர், ஜப்பானில் அறிமுகமாகிவிட்டது. இந்தியாவிலும் வெகுவிரவில் அறிமுகமாகும் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.