This Article is From Dec 20, 2018

பாலியல் வன்கொடுமை: கோவாவில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர் கைது

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும், ரயில்வே போலீசாரின் உதவியுமே குற்றவாளியை பிடிக்க உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா

ரயில் நிலையத்தில் இருந்து வந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளான்.

Panaji:

பிரிட்டிஷ் நாட்டு பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழகத்தை தஞ்சாவூரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெற்கு கோவாவான திவிம் பகுதிக்கு செல்வதற்காக கனனோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த பிரிட்டிஷ் நாட்டு பெண், ரயில் வர தாமதம் ஆனதால், தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அப்போது இதனை கவனித்த தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் அந்த பெண்ணின் உடமைகளை திருட முயற்சி செய்துள்ளான். 

முதலில் பெண்ணை தாக்கி அவரது உடமைகளை திருடியவன், பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளான். இதைத்தொடர்ந்து, பாதிப்புக்கு உள்ளான அந்த பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் குற்றவாளியை பிடித்துள்ளனர். 

தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள ராமசந்திரன் வேறு ஏதும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளானா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement