This Article is From Nov 21, 2019

பாலியல் தொந்தரவு! கோவை பள்ளி நிர்வாகி மீது POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!!

தன்மீதான புகார் குறித்து பள்ளி நிர்வாகி, மொபைலில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யச் சொன்னதாகவும், அப்போது ஆபாச தகவல்கள் POP Up ஆனதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Edited by

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore:

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் கோவையை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகி மீது POCSO சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி சிறுமிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 9-ம் வகுப்பை சேர்ந்த பள்ளி சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தன்மீதான புகார் குறித்து பள்ளி நிர்வாகி, மொபைலில் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்யச் சொன்னதாகவும், அப்போது ஆபாச தகவல்கள் POP Up ஆனதாகவும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement
Advertisement