This Article is From Apr 29, 2019

இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள்: மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்!

Tamil Nadu SSLC Result: 2018 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை 94.5 சதவிகிதமாகும்.

இன்று வெளியாகிறது 10-ம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள்: மாணவர்களுக்கான முக்கிய தகவல்கள்!

SSLC Result 2019: தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தேசிய இன்ஃபோர்மேடிக்ஸ் மையத்தின் (National Informatics Centre- NIC) செயலியையும் பயன்படுத்தலாம்.

New Delhi:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி எனப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in. ஆகிய இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள தேசிய இன்ஃபோர்மேடிக்ஸ் மையத்தின் (National Informatics Centre- NIC) செயலியையும் பயன்படுத்தலாம்.

‘TN SSLC Result' செயலியை எப்படி பயன்படுத்துவது?

-கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் இருந்தோ செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்

-இன்ஸ்டால் செய்யவும்

-செயலியைத் திறக்கவும்

-ரிசல்டு இருக்கும் இடத்தை சொடுக்கவும்

-பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை என்டர் செய்யுவும்

-பிற தகவல்களை சமர்பிக்கவும்

இதையடுத்து வெளியாகும் பக்கத்தில், மாணவரின் ரோல் நம்பர், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் தேர்வு முடிவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். 

2018 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை 94.5 சதவிகிதமாகும். மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 96.4 சதவிகிதமாகும். மாணவர்கள் தேர்ச்சி எண்ணிக்கை 92.5 சதவிகிதமாகும். 

இதற்கு முன்னர் தமிழக தேர்வாணையம், பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இதில் தேர்ச்சியடைந்தவர்களின் எண்ணிக்கை 91.3 சதவிகிதம். மாணவிகள் 93.64 சதவிகிதமும், மாணவர்கள் 88.57 சதவிகிதமும் தேர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

.