This Article is From Dec 02, 2019

கோவையில் கொடூரம்: பிறந்தநாளில் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!

11ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி தனது பிறந்தநாளன்று நண்பருடன் பூங்காவிற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியபோது, ஒரு கும்பல் அவர்களை மறித்துள்ளது.

கோவையில் கொடூரம்: பிறந்தநாளில் நண்பருடன் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை!

அந்த மாணவியிடம் 6 பேரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். (Representational)

Coimbatore:

கோயம்புத்தூரில், பூங்கா ஒன்றில் பிறந்தநாளை கொண்டாட சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை, 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடந்த செவ்வாய்கிழமையன்று 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தனது பிறந்தநாளில் ஆண் நண்பருடன் பூங்காவிற்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் வீடு திரும்பியபோது, ஒரு கும்பல் அவர்களை மறித்துள்ளது. 

தொடர்ந்து, அந்த மாணவியின் ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிய 6 பேர் கும்பல், அந்த நபரை இழுத்துச் சென்று, பூங்காவின் மறைவான பகுதியில் போட்டுள்ளனர். பின்னர் அந்த மாணவியிடம் 6 பேரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்துவைத்துள்ளனர். 

இதையடுத்து, தனக்கு நடந்த கொடூரம் கொடுத்து அந்த மாணவி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மாணவியின் பெற்றோர் அழித்த புகாரின் அடிப்படையில், இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேரில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இருவரை போலீசார் தேடிவருகின்றனர். 

.